திரு உத்தரகோசமங்கை

Monday, December 29, 2014

நாளென் செயும்வினை...

கந்தர் அலங்காரம் செய்யுள்  ...

        பாடல் 38 ... நாள் என் செயும்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.