திரு உத்தரகோசமங்கை

Wednesday, March 18, 2015

சி வா ர் ச் ச னா ச ந் தி ரி கை



ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய
சி வா ர் ச் னா ந் தி ரி கை (தமிழ் மொழி பெயர்ப்பு)
நூல்
 சைவர்கள் அனுட்டிக்கவேண்டிய கடமைகளுள் ஆன்மார்த்த சிவபூஜையானது இன்றியமையாது செய்யத்தக்கதாகும். அது, வைதிக முறையாயும், வைதிகத்தோடு கலந்த ஆகமமுறையாயும், தனி ஆகமமுறையாயுமிருப்பதால், சைவர்களுக்குச் சைவமுறை (ஆகமமுறை) மிகவும் கிரேஷ்டமானது. அந்தச் சிவபூஜையினுள்ளும் சத்தியின் கலப்பில்லாத சுத்த பூஜையினின்றும், கலப்புடைய சூரியன்முதலிய பூஜைகளினின்றும், சத்தியுடன் கூடிய சிவபூஜையானது போக மோக்ஷங்களைத் தரக்கூடியதாகையால் மிகவும் மேலானது. ஆகையால் அம்பிகையுடன் கூடச் சிவபெருமானைப் பூஜிக்கும் ஆன்மார்த்த சிவபூஜையை எல்லாத் திவ்வியாகமங்களிலிருந்தும் திரட்டிச்சுருக்கமாகக் கூறுகின்றேன்

Monday, December 29, 2014

நாளென் செயும்வினை...

கந்தர் அலங்காரம் செய்யுள்  ...

        பாடல் 38 ... நாள் என் செயும்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

Saturday, December 27, 2014

பொது அறிவு தகவல்கள்: நடராஜருக்குரிய திருவாதிரை

நடராஜருக்குரிய திருவாதிரை: நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவன ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. இதில் திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். மார்கழி மாத திருவாதிரை நாளில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அதிகாலையில் சிவாலயம் சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும். விரதகாலத்தில், சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம், மதுரை ஆகிய பஞ்சநடராஜர் தலங்களில் எங்காவது ஓரிடத்திற்கு சென்று வரலாம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் நன்மை தரும் என்று உபதேச காண்டச் செய்யுள் விளக்குகிறது. இவ்விரதத்தை முருகப்பெருமான் மேற்கொண்டு சிவபெருமானின் அருள்பெற்றார். வியாக்ரபாதர் விரதமிருந்து உபமன்யுவைப் பிள்ளையாகப் பெறும் பேறு பெற்றார். விபுலன் என்னும் அந்தணர், இவ்விரத பயனால் நடராஜப்பெருமானின் திருவடியில் நீங்கா இடம் பிடித்தார். விரதநாளில் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும்.

<<< மேலும் >>>

திரு உத்திரகோசமங்கை திருக்கோயில் Pictures

திரு உத்திரகோசமங்கை திருக்கோயில்


<<< மேலும் புகைப்படங்களை பார்க்க ... >>>

மார்கழி ஆருத்ரா தரிசனம் .... 27.12.2014 முதல் 05.01.2015

ஆருத்ரா தரிசனம்!!!  ... அபிஷேக பலன்கள் @ 

 ஸ்ரீ மரகதநடராஜர் 

<<< மேலும் மார்கழி ஆருத்ரா தரிசனம் info ... >>>

Friday, December 26, 2014

Thursday, December 18, 2014

தரிசிக்க : அருள்மிகு மங்களநாதசுவாமி : ஸ்ரீ மங்கலாம்பிகை



அருள்மிகு ஸ்ரீ மங்களநாதசுவாமி ஸ்ரீ  மங்கலாம்பிகை 
திரு உத்திரகோசமங்கை திருக்கோயில்,

photos by Vinothraj Ashokan