ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய
சி வா ர் ச் ச னா ச ந் தி ரி கை (தமிழ்
மொழி பெயர்ப்பு)
நூல்
சைவர்கள் அனுட்டிக்கவேண்டிய
கடமைகளுள் ஆன்மார்த்த சிவபூஜையானது இன்றியமையாது செய்யத்தக்கதாகும். அது,
வைதிக
முறையாயும், வைதிகத்தோடு கலந்த
ஆகமமுறையாயும், தனி
ஆகமமுறையாயுமிருப்பதால், சைவர்களுக்குச் சைவமுறை (ஆகமமுறை) மிகவும் கிரேஷ்டமானது. அந்தச்
சிவபூஜையினுள்ளும் சத்தியின் கலப்பில்லாத சுத்த
பூஜையினின்றும், கலப்புடைய சூரியன்முதலிய பூஜைகளினின்றும், சத்தியுடன் கூடிய
சிவபூஜையானது போக
மோக்ஷங்களைத் தரக்கூடியதாகையால் மிகவும் மேலானது. ஆகையால் அம்பிகையுடன் கூடச்
சிவபெருமானைப் பூஜிக்கும் ஆன்மார்த்த சிவபூஜையை எல்லாத் திவ்வியாகமங்களிலிருந்தும் திரட்டிச்சுருக்கமாகக் கூறுகின்றேன்.
<<< மேலும் ... >>>